முதல் முறையாக ஆன்ட்ராய்டு போனை வெளியிடும் பிளாக் பெர்ரி நிறுவனம்
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஒரு காலத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கொடி கட்டிப் பறந்த பிரபல பிளாக்பெர்ரி நிறுவனம்
இப்போது மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் 1 சதவீதத் திற்கும் குறைவான அளவே வாடிக்கை யாளர்களை பெற்றி ருக்கிறது.
குறிப்பாக, 2013 துவக்கத்தில் வெளிவந்த பிளாக் பெர்ரியின் 10 வரிசை யிலான ஸ்மார்ட் போன்கள்
பெரிய அளவில் பாப்புலரான ஆப்ஸ்கள் இல்லாத காரணத்தி னால் ஆன்ராய்டு
மற்றும் ஆப்பிளுடன் போட்டியை சமாளிக்க முடியாமல் தோல்வியை தழுவியது.
இந்நிலை யில், இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் முயற்சி யில் களமிறங்கி யுள்ள
பிளாக்பெர்ரி விரைவில் முதல் முறையாக ஆன்ட்ராய்டு மொபைலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இதுபற்றி ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் நடந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்
பிளாக்பெர்ரி நிறுவனம் தகவலை வெளி யிட்டிருந்தது.
அதன் அடிப்படை யில், அடுத்து வெளிவர உள்ள பிளாக்பெர்ரி ஹேண்ட் செட்டுகள் டச் ஸ்கீரீன்
மற்றும் பிஸிக்கல் கீ போர்டுடன் இணைந்த ஸ்லைடு மாடலில் இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இந்த வகை ஹேண்ட் செட்டுகள் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்க அதிக வாய்ப்பு உள்ளது.