ஆண்ட்ராய்டு மோகம் மூலம் மக்களை ஏமாற்றும் மொபைல் கடை? - EThanthis

Recent Posts


ஆண்ட்ராய்டு மோகம் மூலம் மக்களை ஏமாற்றும் மொபைல் கடை?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள நொச்சி குளத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). துறை முகத்தில் கான்ராக்ட் தொழிலா ளியாக உள்ளார். 
ஆண்ட்ராய்டு போன் வாங்கும் மோகத்தில் இவர் கடந்த 8ம் தேதி துாத்துக்குடி குருஸ்பர்னாந்து சிலை

பின்புறம் உள்ள பூர்விகா மொபைல் கடையில் ரூ 6000 செலுத்தி கார்பன் ஸ்பார்கிள் வி என்ற ஆண்டராய் போனை வாங்கியுள்ளார்.
ட்விஸ்டட் வெஜிடபில் சூப் ரெசிபி !
அப்போது கடையில் உள்ள ஊழியர்கள் அவரிடம் உள்ள சிம்கார்டை வாங்கி 2 சிம்

உள்ள சிலாட்டில் ஒரு சிம்மை மைக்ரோ கட்டிங் செய்து பொருத்தி யுள்ளனர்.

பின்னர், இவர் வீட்டிற்கு சென்று நண்பர் ஒருவர் மூலம் மற்றொரு சிம்கார்டை

பொருத்து வதற்காக பார்த்த போது ஒரு சிலாட் உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

இதை யடுத்து கடந்த 10ம் தேதி வாங்கிய மொபைல் கடைக்கு சென்று போனை காட்டி விளக்கம் கேட்டுள்ளார்.

இது குறித்து எங்களால் ஒன்றும் செய்ய இயலாது, திருநெல்வேலி யில் உள்ள சர்விஸ் சென்டரு க்கு சென்று சரி செய்து கொள்ளு மாறு கூறினர்.

இதனால் வேலைக்கு விடுப்பு எடுத்து அங்கு சென்று காட்டி யுள்ளார்.

அங்கு அவர்கள் இது வாரண்டி யில் வராது. வேண்டு மெனில் ரூ.4600 செலுத்தினால் சரி செய்ய முடியும் என்று கூறி வி்ட்டனர்.

இதனால் கடும் ஏமாற்ற மடைந்த முருகன் மீண்டும் தான் போன் வாங்கிய பூர்விகா மொபைல் கடைக்கே வந்தார்.

அங்கு கடை மேலாளரை சந்தித்து முறை யிட்டார்.

அதற்கு அவர் இதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டு மெனில் ரூ.300 கொடுத்து
போனை திரும்ப எடுத்துக் கொள்கிறோம் என அலட்சியமாக பதிலளித்தார்.

இதனால் மன உளைச் சலுக்கு ஆளான முருகன் நமது செய்தியாளரை சந்தித்து நடந்த வற்றை கூறினார்.
பிரெட் பூரண போளி ரெசிபி !
அப்போது அவர் கூறிய தாவது, நான் ஆண்டராய்டு போன் வாங்கும் ஆசையில் ஆஃபர் விளம்பர த்தை நம்பி பூர்விகா கடைக்கு வந்தேன்.

அங்கு அவர்களிடம் சாம்சங் மொபைல் போனை கேட்டேன். அதற்கு அதைவிட கார்பன் மாெபைல் நன்றாக இருக்கும் என கூறினர்.

எனக்கு ஆண்ட்ராய்டு பாேனைப்பற்றி ஏதும் தெரியாது என்பதை புரிந்து கொண்ட கடை ஊழியர்கள் உடைந்த நிலையில்

இருந்த கார்பன் போனை வாட் வரி ரூ.760 உட்பட ரூ.6000 பெற்று காெண்டு போனை என்னிடம் விற்றனர்.

இப்போது ரூ.6000 செலுத்தியும் ஒரு சிம்கார்டை மட்டுமே பயன் படுத்தும் நிலை ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து, எனது நண்பரிடம் கூறினேன்.

அவர் சென்னை யில் உள்ள பூர்விகா தலைமை அலுவல கத்திற்கு போன் செய்து பேசிய போது, அவர்கள் சரிவர பதில் தெரிவிக்க வில்லை.

ரூ.6000த்திற்கு போனை வாங்கி ஒரே வாரத்தில் ரூ.300க்கு விற்கவா நான் இந்த போனை வாங்கினேன் என ஆதங்க பட்டேன்.

நான் இது குறித்து மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் மூலம் துாத்துக்குடி பூர்விகா கடை மீது வழக்கு தொடர உள்ளேன்.

என்னைப் போல் பலரும் அந்த கடையில் ஏமாந்தது பின்னர் எனக்கு தெரிய வந்தது என்றார்.

தற்போது ஆண்ட்ராய்டு மாெபைல் மாேகம் அதிகரித் துள்ளதால் தொழில் நகரான துாத்துக்குடி யில்

சாதாரண கூலித் தொழிலாளி களும் ஆண்டராய்டு போனை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள் கின்றனர்.

பூர்விகா போன்ற பெரிய நிறுவனம் கவர்ச்சி கரமான ஆபர் விளம்பரங் களை செய்து மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் வருகின்றன.

உள்ளூர் சிறிய கடைகளில் கிடைக்கும் சேவைகள் கூட பெரிய கடைகளில் கிடைப்ப தில்லை.
வாங்கு வதற்கு முன்பு அன்பாக பேசி விற்று விட்டு, அதன்பின் சிறிய சந்தேகத் திற்கு கூட திருநெல்வேலி

சர்விஸ் சென்டருக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இது பெரிதும் வருத்தத்திற் குரியது.
இதனாலயே பலரும் ஆன்லைன் மூலமாக மொபைல் போன் உட்பட ஏராளமான

பொருட் களை குறைந்த விலையில் வாங்க விரும்பு கின்றனர்.

குறிப்பாக முருகன் வாங்கிய கார்பன் மொபைல் கூட ஸனாப் டீல் ஆன் லைனில் ரூ.4808க்கு விற்கப் படுவது குறிப்பிடத் தக்கது..
ஆண்ட்ராய்டு மோகம் மூலம் மக்களை ஏமாற்றும் மொபைல் கடை? ஆண்ட்ராய்டு மோகம் மூலம் மக்களை ஏமாற்றும் மொபைல் கடை? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close