போனுக்குள் ஓர் உளவாளி - எச்சரிக்கை பதிவு ! - EThanthis

Recent Posts


போனுக்குள் ஓர் உளவாளி - எச்சரிக்கை பதிவு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தென் தமிழகத் தின் ஒரு மாநகரில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் அவர். சமீப நாள்களாக அவருக்கு ஒரு பிரச்னை. அவ்வப்போது அவர் மொபைல் போனில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன. ‘இன்னிக்கு கோயிலு க்குப் போகணும்னு சொன்னியே... இன்னுமா கிளம்பலை?’’ என்று அது கேட்கும். ஆம்...
போனுக்குள் ஓர் உளவாளி

அன்று அவர் கோயிலு க்குப் போக வேண்டும் என்று தன் தோழியுடன் பேசிய போது சொல்லி யிருந்தார். அதைத் தான் அந்தக் குரல் சொன்னது. இப்படியாக, ‘பால் கொதிக்கிறது’, ‘மொட்டை மாடியில் துணி காய்ந்து விட்டது’ என அவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை அவருக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தது அந்த மொபைல் குரல்.
விரைவில் ஜியோ லேப்டாப் !
முதலில், அது ஏதோ பேய் அல்லது ஆவியின் வேலை என்றுதான் அவர் நினைத்தி ருக்கிறார். ஆனால், போகப் போக அந்தக் குரல் விரசமான விஷயங் களை யெல்லாம் பேசத் தொடங்கியது. அந்தப் பெண்ணின் பல அந்தரங்க அடையா ளங்களை யெல்லாம் குறிப்பிட்டுப் பேசியது. ‘எந்நேரமும் தன்னை யாரோ கண்காணிக் கிறார்கள்’ என்ற உணர்வு அவருக்கு அதீத பயத்தைத் தந்தது.

ஒரு கட்டத்தில் இந்த விஷயங் களை மறைக்கவும் தெரியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. தீர்வு தெரியாமல் ஒரு முறை தற்கொலை க்கும் முயற்சி செய்திரு க்கிறார். ஒருநாள் ஃபேஸ்புக்கில் ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ எனும் குழுவின் சைபர் க்ரைம் விழிப்பு உணர்வு பிரசாரங் களைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.

‘முதலில் அந்த மொபைலை எறிந்து விட்டு, புது மொபைலை வாங்குங்கள்’’ என்கிறார்கள் அவர்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மொபைலிலும் அதே பிரச்னை. அடுத்து மூன்றாவது. அதிலும் பிரச்னை தீரவில்லை. ‘‘உங்கள் கணவருக்கு உங்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருக்க வாய்ப்புண்டா?’’ என்ற கேள்விக்கு, ‘‘என் கணவர் அப்படிப் பட்டவர் இல்லை’’ என்று பதிலளிக் கிறார். 

பல கேள்வி களைக் கேட்டு இறுதியாக, ‘‘மொபைல் களை எந்தக் கடையில் வாங்கினீர்கள்?’’ என்று கேட்ட போது, ‘மூன்று மொபைல் களையுமே தெரிந்த பையன் கடையில் தான் வாங்கினேன்” என்றார் அந்தப் பெண். தங்களிட மிருந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி, அந்தப் பெண்ணின்  மொபைலில் ‘ஸ்பை ஆப்’ (Spy App) இருப்பதை உறுதி செய்தனர் ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவினர். 

பிறகு வேறு கடையில் புது மொபைல் வாங்கப் பட்டு, அதில் ஸ்பை ஆப் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, பிரச்னை யிலிருந்து விடு பட்டிருக் கிறார் அந்தப் பெண். தனக்குத் தெரிந்த பையனே இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தி யுள்ளான் என்பது தெரிந்தும், அவன்மீது எந்தப் புகாரும் கொடுக்க முடியாத சூழல். 

அதை நிரூபிப்ப தற்கு ஆதாரங் களும் இல்லை. எல்லா வற்றுக்கும் மேலாக, தன் மானமும் சுய மரியாதையும் போய் விடும் என்கிற பயம். இந்தச் சம்பவம், ஒரு பெருங் கடலின் சிறு துளி மட்டுமே. இன்றைய தேதியில் உலகையே அச்சுறுத்திக் கொண்டி ருக்கும் இந்த உளவாளி செயலிகள் (Spy Apps) இந்தியாவுக் குள் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக் கின்றன.

ஒரு நாட்டின் ராணுவம், தனியாக ஒரு சைபர் ஆர்மியை ஏற்படுத்தி எதிரி நாடுகளைக் கண்காணித்த காலம் போய், இப்போது வீடுகளுக் குள்ளும் உறவுகளுக் குள்ளும் இவை ஊடுருவி யுள்ளன. ‘உங்கள் அன்புக்குரிய வர்களைக் கண்காணிக்க எங்கள் ‘ஸ்பை ஆப்’பை பயன் படுத்துங்கள்.

உங்கள் காதலுக்குரிய வர்களைப் பத்திரமாகப் பாதுகாத்தி டுங்கள். தொடர்புக்கு...’’ என்று வந்த ஒரு குறுந்த கவலில் தொடங்கிய இந்தத் தேடல், பல அதிர்ச்சி கரமான விஷயங் களைக் கட்ட விழ்த்து விட்டது.

‘ஸ்பை ஆப்’ என்பது என்ன?

உங்களின் மொத்த செயல்பாடு களையும் கண்காணிக்கும் உளவாளி. இந்த உளவாளியை உங்களைக் கண்காணிக்க வைப்பது மிகச் சுலபம். உங்கள் மொபைலில் உங்களு க்குத் தெரியாமல் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும், அவ்வளவே! இதை உங்கள் போனைக் கையில் எடுத்துத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. 

உங்கள் கூகுள் அக்கவுன்ட்டின் பாஸ்வேர்டு யாருக் காவது தெரிந்தால், இணைய தளத்தி லிருந்தே  உங்கள் போனுக்குள் ‘ஸ்பை ஆப்’பை இன்ஸ்டால் செய்து விடலாம். இந்த ஸ்பை ஆப் உங்கள் மொபைலில் இருப்பதே உங்களுக்குத் தெரியாது. அதற்கான எந்த அடையாளங் களையும் அறிகுறி களையும் அது காட்டாது.

நீங்கள் யாருடன் என்ன பேசுகிறீர்கள், என்ன மெசேஜ் அனுப்பு கிறீர்கள், இ-மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்கைப் எனச் சகலத்திலும் உங்களின் செயல்பாடு களையும் இந்த ஸ்பை ஆப் கண் காணிக்க முடியும்; அதைக் கட்டுப் படுத்தவும் முடியும். 
எச்சரிக்கை பதிவு
உச்சமாக, உங்கள் மொபைல் கேமராவை உங்களு க்கே தெரியாமல் இயக்கி, நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களை யும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால், மொபைலில் கேமரா இயங்கிக் கொண்டிருப் பதற்கான எந்த அறிகுறி களும் உங்களு க்குத் தெரியாது. 

அதே போல், உங்கள் மொபைலின் மைக்கை இயக்கி உங்களைச் சுற்றி நடக்கும் உரையாடல் களையும் தெளிவாகக் கேட்க முடியும். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மட்டுமே சாத்திய மாகிக் கொண்டிருந்த இந்த விஷயங் களை இன்று எவரும் பெற்று விட முடியும். செலவு, சில ஆயிரங்கள் மட்டுமே! ‘‘இந்த ஸ்பை ஆப்களின் ஆரம்பம் ஒரு நல்ல நோக்கம் தான்.
நிர்மலாதேவி யார் காரில் சென்றார்? 
குழந்தை களைக் கண்காணிக்க பெற்றோ ர்களுக்கு  இது உதவும் என்ற அடிப்படை யில் தான் வந்தன’’ என்கிறார், ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவைச் சேர்ந்த வினோத். ‘‘பல நிறுவனங்கள், தங்களின் பணியாளர் களை இதன் மூலம் கண் காணித்தன. தங்கள் நிறுவன ரகசியங் களை அவர்கள் எங்காவது சொல்லி விடுவார் களோ என்பதைக் கண்காணிக்க இது பயன் படுத்தப் பட்டது.

இன்றும் குழந்தை களையும் நிறுவனங் களையும் முன்னி றுத்தியே இந்த ஸ்பை ஆப்களுக்கு விளம்பரம் செய்யப் படுகிறது. ஆனால், இன்று அது அதற்காக மட்டுமே பயன் படுகிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. காதலர்கள் ஒருவரை யொருவர் கண்காணிக் கிறார் கள். சந்தேகப்படும் கணவர்கள், மனைவியைக் கண்காணிக் கிறார்கள்.

குறிப்பாக, வெளிநாட்டு வேலையி லிருக்கும் பலர், தங்கள் மனைவிக்கே தெரியாமல் இந்த ஆப்களை போனில் இன்ஸ்டால் செய்து வைத்து அவர்களைக் கண்காணிக் கிறார்கள். இது குடும்ப உறவுக்குள் பெரிய பிளவுகளை உருவாக் குகிறது. ஒவ்வொரு நாளும் இப்படி நூற்றுக் கணக்கான புகார்கள் எங்களுக்கு வருகின்றன.

இதைக் கட்டுப் படுத்த நம் நாட்டில் சரியான சட்டங்களும் இல்லை, அது குறித்த தொழில் நுட்ப முன்னெடுப்பு களும் இல்லை. இந்த டிஜிட்டல் உலகில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு தீர்வு எதையும் சொல்ல முடிய வில்லை’’ என்று ஆதங்கத் துடன் பேசுகிறார் வினோத். உலகின் பெரும் பாலான நாடுகளில் இந்த ஸ்பை ஆப்களைக் கட்டுப் படுத்துவ தற்குத் தனிச் சட்டங்கள் ஏது மில்லை.

இது, முழுக்க முழுக்க ‘தனிநபர் உரிமை’ (Right to Privacy) சட்டத்தின் அடிப்படை யிலேயே பார்க்கப் படுகிறது. இவற்றை விற்கும் நிறுவன ங்களும், ‘எங்கள் விற்பனை சட்ட பூர்வமானதே. இதை உபயோகிப் பவர்களும் சட்ட விதிமுறை களுக்கு உட்பட்டு உபயோகிக்க வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டு விடுகின்றன. இது குறித்து கோவையைச் சேர்ந்த சைபர் க்ரைம் வழக்கறிஞர் சத்ய நாராயணனிடம் பேசினோம்.

‘‘தனிநபர் சுதந்திரத் துக்கும் உரிமை களுக்கும் அதிக முக்கியத் துவம் கொடுக்கும் ஓர் அரசியல் சட்ட அமைப்பைக் கொண்டது இந்தியா. அரசு கொண்டு வந்த ஆதார் கார்டு திட்டமே கடுமை யான எதிர்ப்பு களைச் சந்தித்தது இதன் அடிப்படை யில் தான். ஆனால், இங்கு தான் ஸ்பை ஆப்கள் மூலம் தனி மனிதர்களின் அந்தரங் கங்கள் வரை சூறை யாடப்படும் அவலம் நிலவுகிறது. 

ஒருவர், தன் குழந்தை களையோ அல்லது துணையையோ அவர்களின் அனுமதி யுடன் கண்காணிக்க இந்த ஸ்பை ஆப்களைப் பயன் படுத்துவது சட்டபூர்வ மானது தான். ஆனால், இங்கு அப்படி நடப்பவர்கள் மிகக்குறைவு. ஸ்பை ஆப்களை உபயோகிப் பவர்கள் பலரும் மிக மோசமான சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடு கிறார்கள். 

அவற்றைக் கட்டுப் படுத்த வேண்டியது ‘தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000’தான். அதில் தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமைகள் குறித்துப் பேசுவது மொத்தமே ஆறு பிரிவுகள் மட்டுமே. அதே சமயம், ஒரு நிறுவனம் தன் பணியாளர் களை இந்த ஆப்களின் மூலம் கண்காணிப்பது சட்ட பூர்வ மானதாகத் தான் இருக்கிறது.
போனுக்குள் எச்சரிக்கை பதிவு
இந்தச் சட்டங்க ளில் நிறைய சிக்கல்கள் இருக்கி ன்றன. இன்றைய உலகில் லத்தி, துப்பாக்கி களுடன் நிற்கும் போலீஸ் மட்டுமே மக்களைப் பாதுகாத்திட முடியாது. எதிரிகள் வேறு ரூபங்களை எடுத்து விட்டனர். அவர்களை எதிர் கொள்ள நாமும் மாற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். 
இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது !
இந்த மாற்றத்தை எவ்வளவு விரைவு படுத்த முடியுமோ, அவ்வளவு நல்லது’’ என்று எச்சரிக்கிறார் சத்ய நாராயணன். உலகமே மொபைலின் தொடு திரையில் சுருங்கிவிட்ட இந்த டிஜிட்டல் உலகில், மனித மனங் களைப் பாழ் படுத்தும் சூழல்கள் பெருகி விட்ட நிலையில், அறம் சார்ந்த வாழ்வு மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.
போனுக்குள் ஓர் உளவாளி - எச்சரிக்கை பதிவு ! போனுக்குள் ஓர் உளவாளி - எச்சரிக்கை பதிவு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close